இலங்கை கிரிக்கெட் சபையினால் தெரிவான கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவர்
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றிவரும் எம்மா க்ளோரியாவை இலங்கை கிரிக்கெட் சபை கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக தெரிவு செய்துள்ளது.
அண்மையில் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சபை கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதிற்குட்பட்ட மகளிர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் நடுவராக எம்மா க்ளோரியா கடமையாற்றினார்.
மட்டக்களப்பு மாவட்ட கிளையின் நடுவர்
மட்டக்களப்பு சிசிலியா மகளிர் உயர்தர பாடசாலையின் பழைய மாணவியான இவர் இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்க மட்டக்களப்பு மாவட்ட கிளையின் நடுவர்களுள் ஒருவராவார்.

இவர் வலய, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொண்டு மட்டக்களப்பு மண்ணை பெருமையடையச் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 4 மணி நேரம் முன்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam