அநுர அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றம்
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
114 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும், வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம்
கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதங்கள் சபையில் இடம்பெற்று வந்த நிலையில், இன்றையதினம் வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு சபையில் நடைபெற்றது.
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாளான இன்று(21) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் சபையில் முன்னிலையாகி உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri