பிரான்ஸில் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம்
பிரான்ஸின் கரீபியன் தீவான மார்டினியுக்கில் கோவிட் நடவடிக்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
சுகாதார பணியாளர்கள் மற்றும் சிவில் சேவையாளர்களுக்குக் கட்டாய தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு எதிராக அங்கு இரண்டாம் நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவாடலூப் தீவில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்குக் கட்டாய தடுப்பூசி போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்ப்பவர்கள், மார்டினிக் காவல்துறையினர் கடமையிலிருந்தபோது, எரியும் டயர்களின் தடுப்புகளால் தாக்கியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தி வாகனங்களைத் தீயிட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளோரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லையெனவும் அறியமுடிந்துள்ளது.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 9 மணி நேரம் முன்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
