பிரான்ஸில் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம்
பிரான்ஸின் கரீபியன் தீவான மார்டினியுக்கில் கோவிட் நடவடிக்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
சுகாதார பணியாளர்கள் மற்றும் சிவில் சேவையாளர்களுக்குக் கட்டாய தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு எதிராக அங்கு இரண்டாம் நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவாடலூப் தீவில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்குக் கட்டாய தடுப்பூசி போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்ப்பவர்கள், மார்டினிக் காவல்துறையினர் கடமையிலிருந்தபோது, எரியும் டயர்களின் தடுப்புகளால் தாக்கியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தி வாகனங்களைத் தீயிட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளோரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லையெனவும் அறியமுடிந்துள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam