பட்டாசு உற்பத்தி தொழிலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
பண்டிகை காலம் நெருங்கி வருகின்ற நிலையில் நாட்டில் தற்போது பட்டாசு உற்பத்தி தொழிற்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ இன்று(22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்துறை வீழ்ச்சி
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தற்போது பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை பொருட்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை மையமாகக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் 90 சதவீதமானவை விற்பனை செய்யப்படாமல் எஞ்சியுள்ளன.
அப்போது உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப் பிறப்பின் போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறைந்த விலைக்கு விற்பனை
சிலர் அனுமதிப்பத்திரம் பெறாமலும் சில தரமற்ற பட்டாசுகளை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில், உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை, அவற்றுக்கான உற்பத்தி செலவுகளையேனும், மீளப்பெறுவதற்கு அவற்றைக் குறைந்த விலையில் சந்தைக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை சில உற்பத்தியாளர்கள் முன்னெடுத்துவருகின்றோம் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam