பட்டாசு உற்பத்தி தொழிலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
பண்டிகை காலம் நெருங்கி வருகின்ற நிலையில் நாட்டில் தற்போது பட்டாசு உற்பத்தி தொழிற்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ இன்று(22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்துறை வீழ்ச்சி
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தற்போது பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை பொருட்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை மையமாகக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் 90 சதவீதமானவை விற்பனை செய்யப்படாமல் எஞ்சியுள்ளன.
அப்போது உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப் பிறப்பின் போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறைந்த விலைக்கு விற்பனை
சிலர் அனுமதிப்பத்திரம் பெறாமலும் சில தரமற்ற பட்டாசுகளை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில், உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை, அவற்றுக்கான உற்பத்தி செலவுகளையேனும், மீளப்பெறுவதற்கு அவற்றைக் குறைந்த விலையில் சந்தைக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை சில உற்பத்தியாளர்கள் முன்னெடுத்துவருகின்றோம் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 15 மணி நேரம் முன்
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan