திருகோணமலையில் வைக்கோலுக்குத் தீ வைப்பு! பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகள் வைக்கோலுக்குத் தீ வைப்பதால் கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருகோணமலையில், நெல் அறுவடை முடிந்துள்ள நிலையில், வயல்வெளிகளில் விவசாயிகள் வைக்கோலுக்குத் தீ வைக்கும் வழக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கந்தளாய், வான் எல, வட்டுக்கச்சி, தம்பலகாமம் போன்ற பகுதிகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
பாதிப்பு
அறுவடைக்குப் பிறகு மிஞ்சியிருக்கும் வைக்கோல், அப்பகுதியில் உள்ள கால்நடைகளின் முக்கிய உணவாக உள்ளது. ஆனால் விவசாயிகள் வைக்கோலுக்குத் தீ வைப்பதால், கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போகிறது.
இதனால், பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் உணவின்றித் தவித்து வருகின்றன. வைக்கோல் எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டம், அருகிலுள்ள வீதிகளையும் கிராமங்களையும் சூழ்ந்து கொள்கிறது.
இதனால், வீதிகளில் வாகனங்கள் செல்வது கடினமாகி, போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும், இந்த புகை கிராம மக்களுக்கும் சுவாசப் பிரச்சினைக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
கோரிக்கை
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, பொலிஸார் மற்றும் விவசாயத் திணைக்களம் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க, வைக்கோலை முறையாக அப்புறப்படுத்தவோ அல்லது மாற்று வழிகளில் பயன்படுத்தவோ விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
