காத்தான்குடியில் தீ விபத்து: 40 கோடி பெறுமதியான பொருட்கள் இழப்பு(Photos)
காத்தான்குடி ஹாட்வெயார் களஞ்சியசாலையில் தீப்பரவல் 40 கோடி பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்.
தீ விபத்து
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி-01, முதியோர் இல்ல குறுக்கு வீதியில் அமைந்துள்ள ஹாட்வெயார் ஒன்றுக்குச் சொந்தமான களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளது.

இச்சம்பவம் செவ்வாய்கிழமை (15.11.2022) நள்ளிரவு 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தீ பரவலின் காரணமாக களஞ்சியசாலை முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன், மின்னொழுக்கே இதற்கு காரணம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
40 கோடி பெறுமதியான பொருட்கள் இழப்பு

இக்களஞ்சியசாலையில் 40 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவை அனைத்தும் எரிந்து தீக்கிரையாகியுள்ளதாகவும் அதன் உரிமையாளர் நஜீப் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி பிரதான வீதிலுள்ள கொழும்பு ஹார்ட்வெயார் நிறுவனத்திற்குச்
சொந்தமான களஞ்சியசாலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.






பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 4 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri