மஸ்கெலியா - ஹமில்டன் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ : எரிந்து நாசமாகியுள்ள நிலப்பரப்பு
நல்லதண்ணி ஹமில்டன் பகுதியில் 23ஆம் திகதி மதியம் ஏற்பட்ட தீ, அப்பகுதியில் நிலவிய மிகவும் வெயில் வானிலை காரணமாக, வனப்பகுதி முழுவதும் வேகமாகப் பரவியது.
எனினும், குறித்த வனப்பகுதியில் ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் கிட்டத்தட்ட 30 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் ஹட்டன் வனப்பகுதி காப்பாளர் வி.ஜே. ருக்ஷன் தெரிவித்துள்ளார்.
வனப்பகுதிகளுக்கு தீ வைக்கும் நபர்கள்
லக்ஷபான இராணுவத்தினர், வன பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி பொலிஸ் அதிகாரிகள் பரவி வந்த தீயைக் கட்டுப்படுத்த முயன்ற போதிலும், மலையின் உச்சியில் பரவிய தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்துள்ளது.
இருப்பினும், நோர்வூட் பிரதேச செயலாளரின் தலையீட்டால், இலங்கை விமானப்படை பெல் 412 ஹெலிகொப்டரின் உதவியுடன் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு, 11 முறை தண்ணீர் தெளித்த பின்னர் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக, வனப்பகுதிகளுக்கு தீ வைக்கும் நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், தனது அலுவலகத்திற்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ பொதுமக்களைத் தெரிவிக்குமாறு வனப்பகுதி காப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 5 மணி நேரம் முன்

மிகப்பெரிய புதையலை கண்டுபிடித்துள்ள இந்தியாவின் அண்டை நாடு.., அடுத்த 50 ஆண்டுகளுக்கான ஜாக்பாட் News Lankasri

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
