வத்தளையில் 3 மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்து - ஒருவர் பலி
வத்தளை, மாதகொடையில் வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு ஏற்பட்ட தீ பிரதேசவாசிகளின் உதவியுடன் அணைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறை ஒன்றில் ஒருவர் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து
உயிரிழந்தவர் 90 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மட்டும் வீட்டில் தங்கியிருந்ததாகவும், அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam