கம்பஹா மாவட்டத்தின் பொலிஸ் நிலையமொன்றில் தீ விபத்து
கம்பஹா மாவட்டத்தின் வெயாங்கொடை பொலிஸ் நிலையத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
வேயாங்கொடை பொலிஸ் நிலையத்தின் பழைய பொருட்கள் மற்றும் புத்தகங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த அறை, இன்று(31.12.2024) பிற்பகல் தீவிபத்தில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
அதன் காரணமாக பழைய முறைப்பாட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட ஏராளம் ஆவணங்கள் தீயில் எரிந்து அழிந்து போயுள்ளன.
தீயணைப்பு
அத்துடன், போக்குவரத்துப் பிரிவு, சமூக பொலிஸ் பிரிவு, சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளின் அறைகளும் சிறு அளவில் சேதமடைந்துள்ளன.
கம்பஹா மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் பலத்த முயற்சியின் பின்னர் தீயை அணைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தின் காரணமாக எந்தவொரு நபருக்கும் உயிரிழப்புகள் அல்லது பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
