முகக் கவசமின்றி விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
முகக் கவசமின்றி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சசாட்டினை ஏற்றுக் கொண்ட 10 பேருக்கு காலி நீதவான் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்குள் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
உனவட்டுன இலுக்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற விருந்தில் இந்த நபர்கள் முகக் கவசமின்றி கலந்து கொண்டுள்ளனர்
அத்துடன் இரவு முதல் விடியும் வரை விருந்தில் கலந்து கொண்டவர்கள் மதுபானம் அருந்தியுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.