அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வெளிநாட்டுப் பயணங்களிற்கு 40 டொலர்கள்
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் போது வழங்கப்படும் கொடுப்பனவுகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில வகை கொடுப்பனவுகள் குறைக்கப்பட உள்ளதாகவும், சில ரத்து செய்யப்பட உள்ளதாகவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
நிதி அமைச்சின் தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதுடன், எதிர்வரும் 20ம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடுப்பனவு குறைப்பு
அரசாங்கத்தின் சார்பில் கல்வி சுற்றுலாக்கள், பயிற்சிகள் மற்றும் கூட்டங்கள் போன்றவற்றுக்கு வெளிநாடு செல்லும் தரப்பினருக்கு நாளாந்தம் வழங்கப்படும் 40 டொலர் கொடுப்பனவு 25 டொலர்களாக குறைக்கப்படுகின்றது.
இதுவரையில் 30 நாட்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு 15 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட உள்ளது.
நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்து மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுக்கு 15 நாட்களுக்கு 75 டொலர் என வழங்கப்பட்ட கொடுப்பனவு தொகை இனி 10 நாட்களுக்கு 40 டொலர்கள் என குறைக்கப்பட உள்ளது.
மேலும் அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களுக்கு அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணங்களின் போது வழங்கப்படும் பொழுதுபோக்கு கொடுப்பனவு தொகையான 750 டொலர் கொடுப்பனவு ரத்து செய்யப்பட உள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri
