மின்கட்டண திருத்தங்கள்: இறுதி முடிவு தொடர்பில் ஆணைக்குழுவின் அறிவிப்பு
உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான, தமது இறுதித் தீர்மானம், 2025 ஜனவரி 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், உத்தேச கட்டண திருத்தம் தொடர்பான பொது கலந்தாய்வுகளை, 2024 டிசம்பர் 17 டிசம்பர் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதிக்கு முன்னர் இந்த விடயம் தொடர்பான தமது கருத்துக்களை மெய்நிகராகவோ அல்லது எழுத்து மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபை
இது தொடர்பான சமர்ப்பிப்புகளை; மின்னஞ்சல் - Email -info@pucsl.gov.lk, அல்லது 076 4271030 என்ற வட்சப் இலக்கத்துக்கு அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2024 டிசம்பர் 06 அன்று, இலங்கை மின்சார சபை, தனது மின்சார கட்டண திருத்த முன்மொழிவை சமர்ப்பித்தது.

அத்துடன் தற்போதைய கட்டணங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் என்றும் கூறியது.
இதற்கு முன்னர், வருடாந்தம் நான்கு முறை மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என முன்னாள் அரசாங்கத்தின் கீழ் முன்மொழியப்பட்டிருந்தது.
இருப்பினும், 2023 இல், கட்டண திருத்தங்கள் மூன்று முறை மேற்கொள்ளப்பட்டன.
அதே நேரத்தில் இந்த ஆண்டு இரண்டு திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போதைய அரசாங்கம் வருடத்திற்கு இருமுறை கட்டண திருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri