பால்மாவின் விலை குறித்து திங்கட்கிழமை இறுதி முடிவு
இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையை அதிகரிப்பது குறித்த முடிவு எதிர்வரும் திங்கட்கிழமை (11) அறிவிக்கப்படவுள்ளது.
பால்மா இறக்குமதியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள, தங்களின் பால்மா கொள்கலன்களை அகற்றுவதற்காக 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றதாக இறக்குமதியாளர்களின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து எதிர்வரும் திங்களன்று துறைமுகத்திலிருந்து 16 பால்மா கொள்கலன்கள் வெளியே கொண்டு செல்லப்படவுள்ளன.
இந்த நிலையில், சுத்திகரிக்கப்பட்ட பால்மா புதன்கிழமை (13) க்குள் சந்தைக்கு கொண்டு செல்லப்படும் என்று இறக்குமதியாளர்களின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, இறக்குமதியாளர்கள் 1 கிலோ இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பக்கட்டை 250 முதல் 300 ரூபா வரை அதிகரிக்க பரிசீலித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
உலகளாவிய சந்தை விலைகளும் கப்பல் செலவுகளும் அதிகரித்திருப்பதாலும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு குறைவு காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
