ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை
கிண்ணியா பிரதேசத்தில் கடந்த 23ஆம் திகதி குறிப்பாகக் கேணி அனர்த்தம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு அருகில் கடந்த 23ஆம் திகதி குறிஞ்சாக் கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தின் போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துக் கொண்டிருந்த வேளையில் திருகோணமலை - ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த அப்துல்சலாம் யாசீம் தாக்கப்பட்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
புகாரியடி சந்தியிலிருந்து கிண்ணியா தள வைத்தியசாலையை நோக்கி வந்துகொண்டிருந்த போராட்டத்தின் போது இளைஞர்கள் தன்னை தாக்கியதுடன் ஒளிப்பதிவு செய்த கையடக்கத் தொலைபேசியையும், அடித்து பரித்து சென்றுள்ளதாகவும் அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்நிலையில் குறித்த சம்பவ இடத்தை பார்வையிடுவதற்காக ஊடகவியலாளரை அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த தாக்குதல் தொடர்பில் திருகோணமலை நீதிமன்றத்தில் நாளை அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க உள்ளதாகவும், கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டமை தொடர்பில் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் ஊடகவியலாளர்
தாக்கப்பட்டு கையடக்கத்தொலைபேசி திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கை மக்களுக்கு உதவ தேநீர் மொய் விருந்து நடத்தும் நபர்! யார் அவர்? குவியும் பாராட்டுகள் News Lankasri

குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு என்ன சொல்ல விரும்புறீங்க? ஆங்கிலத்தில் பதிலளித்த பேரறிவாளன் வீடியோ News Lankasri

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! வருத்தத்தில் ரசிகர்கள்.. Cineulagam

பேஸ்புக் காதல் மயக்கம்! ரகசிய கோப்புகளை பெண்ணுக்கு அனுப்பிய ராணுவ வீரர்! பின்னர் தெரிந்த அதிர்ச்சி உண்மை News Lankasri

குருபகவானின் நேரடி அருள்.., அடுத்த 7 மாதத்திற்கு அதிர்ஷ்ட யோகத்தில் நனையும் ராசியினர்கள் இவர்களா? Manithan
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada
20 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022