புலனாய்வு பிரிவினை கொண்டு மக்கள் நலனுக்காக போராடுபவர்களை நசுக்க வேண்டாம்: க.மு.தம்பிராசா

Sri Lanka Police Jaffna Government Of Sri Lanka
By Theepan Jun 06, 2023 12:53 PM GMT
Report

மக்களினுடைய நல்வாழ்விற்கு போராடும் அரசியல் கட்சிகளையும் மக்கள் அமைப்பினையும் புலனாய்வு பிரிவினை கொண்டு நசுசக்கவேண்டாம் அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் க.மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (06.06.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக உரிமைகளுக்காக போராடுகின்ற அமைப்புகளை மறுத்து அவர்கள் மீதான அடக்குமுறைகளை தொடருகின்ற பொலிஸாரின் அடக்குமுறை நிறுத்தப்படவேண்டும்.

வடகிழக்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்படுகின்ற பொலிஸாரின் திட்டமிட்ட அத்துமீறல்களை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

புலனாய்வு பிரிவினை கொண்டு மக்கள் நலனுக்காக போராடுபவர்களை நசுக்க வேண்டாம்: க.மு.தம்பிராசா | Fighting People Welfare Thambirasa Speech Jaffna

கடமை செய்யவிடாமல் தடுத்தார்கள்

மிக அண்மையில் மருதங்கேணியில் ஒரு போராட்டத்திற்கு பங்குபற்றிய ஒருகட்சியின் மகளிர் அணித்தலைவியும் அதேபோல் இன்னுமொரு ஆண் உட்பட இருவர் மருதங்கேணி பொலிஸாரை கடமை செய்யவிடாமல் தடுத்தார்கள் எனக் கூறி அவர்களை கைது செய்துள்ளார்கள்.

தேர்தல் கடமைகளுக்கு செல்லுகின்ற அனைத்து பொலிஸாரும் தங்களுடைய பொலிஸ் உடையை அணிந்துதான் செல்கின்றார்கள்.

ஆகவே இங்கு எதற்காக சிவில் உடையில் செல்லவேண்டும். இங்கே புலனாய்வாளார்கள் யாரை புலனாய்வு செய்கின்றார்கள்?

அரசுக்கு எதிராக செயல்படுகின்ற அல்லது தங்களுடைய உரிமைகளுக்காக போராடுகின்ற மக்களை அச்சுறுத்தவே புலனாய்வாளர்கள் வடகிழக்கு மாகாணங்களில் செயற்படுகின்றார்கள்.

அன்று வடமகாணத்தினை அச்சுறுத்திய கிறிஸ் மனிதன் புலனாய்வாளர்களின் வேலையாக தான் மக்களால் பார்க்கப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு தடவை எங்களுடைய மக்களின் போராட்டத்தை எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக அரசாங்கம் கிறீஸ் மனிதன், ஆவா குழு, வாள்வெட்டு கும்பல்கள் என இவற்றுக்கு பின்னால் அரச புலனாய்வாளர்கள் தான் செயற்படுகின்றார்கள் என வடக்கிழக்கு வாழ் தமிழர்களும் சந்தேகிக்கின்றார்கள்.

புலனாய்வு பிரிவினை கொண்டு மக்கள் நலனுக்காக போராடுபவர்களை நசுக்க வேண்டாம்: க.மு.தம்பிராசா | Fighting People Welfare Thambirasa Speech Jaffna

ஏவி விடப்படும் புலனாய்வாளர்கள்

எமது மக்கள் உரிமைகளுக்காக போராடுகின்ற அரசியல் கட்சிகளாக இருக்கட்டும் அமைப்புக்களாக இருக்கலாம் அவர்கள் வேண்டுமென்றே பொலிஸாரின் கடமைகளை தடை செய்தார்கள் என்று வர்ணனை செய்கின்றது அரசு.

ஆனால் பரீட்சை நிலையத்தில் பாதுகாப்பு வழங்கும் பொலிஸார் எங்கே இருக்க வேண்டும் பரீட்சை மண்டபத்தில் தானே எவ்வாறு அவர்கள் விளையாட்டு மைதானத்திற்கு வருகை தர முடியும்.

ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை நசுக்குவதற்காக இந்த புலனாய்வாளர்கள் ஏவி விடப்படுகின்றார்கள். எங்களுடைய மக்களையும் அதிகமான பணத்தினை வழங்கி புலனாய்வாளர்கள் பயன்படுத்துகின்றார்கள்.

தமிழ் தேசியப்பரப்பில் செயற்படுகின்ற அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அரசியல் சார் தீர்வுகளுக்கான அமைப்புகள் மீதும் புலனாய்வு செய்ய வேண்டிய தேவை அரசுக்கு இல்லை.

ஏனென்றால் அவர்கள் மீதான நடவடிக்கைகளுக்காக எத்தனையோ கோடி ரூபாய் கொடுத்து சிலரை நீங்கள் கொள்வனவு செய்து வைத்துள்ளீர்கள்.

ஆகவே அரசியல் கட்சிகளை அச்சுறுத்தாதீர்கள் மக்கள் சார் சிவில் அமைப்புகளை அச்சுறுத்தாதீர்கள் தமிழ் மக்களினுடைய இறைமையை கேள்விக்குட்படுத்தாதீர்கள் மக்களினுடைய நல்வாழ்வு சார்ந்த எந்த ஒரு அமைப்பினையும் அச்சுறுத்த வேண்டாம். என தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
நன்றி நவிலல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US