ஐம்பதாயிரத்தை தொட்ட கொழும்பு தாமரை கோபுர சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கொழும்பு தாமரை கோபுரத்திற்கு ஐம்பதாயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ளதாக தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தாமரைக் கோபுரத்திற்கு விஜயம் செய்த ஐம்பதாயிரமாவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு குறித்த நிர்வாகத்தினரால் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதி தாமரைக் கோபுரம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி
இதன்படி நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கினை வழங்கி வரும் சுற்றுலாத்துறையில் தாமரைக் கோபுரம் முக்கிய ஓர் இடமாக காணப்படுகின்றது.
அத்தோடு, தாமரைக் கோபுரத்திற்கு விஜயம் செய்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு தனியார் தேயிலை ஏற்றுமதி நிறுவனம் ஒன்று பெறுமதியான பரிசுப் பொருள் ஒன்றையும் வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
