திருகோணமலையில் கனமழையால் நீரில் மூழ்கிய வயல் நிலங்கள்
திருகோணமலை தம்பலகாமம் ,கிண்ணியா பகுதியில் கனமழை காரணமாக விதைத்து ஒரு சில நாட்கள் கடந்த நிலையில் நெற் செய்கை நீரில் மூழ்கியுள்ளது.
நேற்று (13) பெய்த கனமழை காரணமாக குறித்த பகுதி விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
தம்பலகாமம் கோயிலடி தாயிப் நகர் வீதியை அண்மித்த பகுதி வயல் நிலங்கள் மற்றும் கிண்ணியா சூரங்கல் கற்குழி பகுதி நெற் செய்கை விவசாய நிலங்களே இவ்வாறு மூழ்கியுள்ளன.
செல்வம் எம்.பி தொடர்பில் வெளியான மற்றுமொரு குரல்பதிவு! வீடுகளுக்கு தேடிச்சென்று அச்சுறுத்தும் கும்பல்
சேத விபரங்கள்
பெரும்போக நெற் செய்கைக்காக விதைப்பு நடவடிக்கை மேற்கொண்டு ஓரிரு நாட்களின் பின் கனமழை பெய்ததால் பல ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

தற்போது சில பகுதிகளில் நெற் செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.
கனமழை காரணமாக நீரில் மூழ்கிய வெள்ள நீர் படிப்படியாக வடிந்தோடுகிறது அதன் பின்னரே சேத விபரங்கள் தெரியவரலாம்.

3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam