உர மானியத்தை ரூ.5000 ஆக உயர்த்த அரசாங்கம் முடிவு
அரசாங்கத்தால் வழங்கப்படும் உர மானியத்தை ஒரு ஹெக்டேருக்கு ரூ.30,000 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று (05.06.2026) அரசு தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் பங்கேற்ற அவர், சம்பந்தப்பட்ட மானியம் ரூ.5,000 உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்
விவசாயிகளின் கணக்குகளில்
அதன்படி, 502,836 பேர் இந்த மானியத்திற்குத் தகுதி பெறுவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக அரசாங்கம் ரூ. 10,947 மில்லியனைச் செலவிடும் என்றும், அத்தொகை விவசாயிகளின் கணக்குகளில் ஒரே தடவையில் வரவு வைக்கப்படும் என்றும் விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிகா ரணதுங்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.