கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்(Photos)
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமதொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் உரப்பற்றாக்குறையால் தமது விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் மூன்று மாவட்ட விவசாயிகளும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் விவசாயிகள் முவைத்த கோரிக்கைக்கு அமைவாக,விரைவாக உரிய தீர்வு பெற்றுத்தரப்படுமென செந்தில் தொண்டமானால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
கமதொழில் அமைச்சு நடவடிக்கை
அதன் பிரகாரம் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டுசென்றதுடன் உரப் பற்றாக்குறைக்கு தீர்வையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு போதிய உரத்தை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை கமதொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |