படகுப்பாதையின் இயந்திரம் பழுது: பாரிய சிரமத்தை எதிர்கொண்டுள்ள பயணிகள்(Photo)
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே சேவையில் ஈடுபடும் படகுப்பாதையின் இயந்திரம் திடீரென பழுதடைந்ததால் அரச உத்தியோகத்தர்கள் தாமதமாக அலுவலகங்களுக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (09) ஏற்பட்ட இவ்இயந்திரப்பழுது பாதைப் பணியாளர்களின் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளது எனப் பின்னர் கண்டறியப்பட்டது.
மேற்படி பாதையின் இயந்திரம் பழுதடைந்தமையால் கடந்த சில வாரங்களாகப் பாதைச் சேவை இடம்பெறவில்லை. பின்னர் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா வரையான செலவில் இயந்திரம் திருத்தம் செய்யப்பட்டதாகத் தெரியவருகின்றது.
இந்நிலையில், நேற்று காலை இயந்திரம் திடீரென இயங்கவில்லை. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது, இயந்திரத்திற்கு புதிய பிளக் மாற்றுமாறு கூறியதாகவும் அதை பணியாளர்கள் மாற்றவில்லை என்பதும் தெரியவந்தது. புதிய பிளக் மாற்றிய பின்னரே பயணம் தொடர்ந்தது.
இதனால் அரச உத்தியோகத்தர்கள் பலரும் குறுகிய நேர விடுமுறையில் அலுவலகம் சென்றனர் எனவும் கூறப்பட்டது.
பாதையின் இயந்திரத்தைச் சரியான முறையில் பராமரிப்பதன் மூலம் தமது தடையற்ற
போக்குவரத்தை உறுதிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.







இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
