இந்தியாவில் நண்பரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய பெண் மருத்துவர்
பீகார் மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது ஆண் நண்பரரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து கொலை முயற்சி என்ற குற்றச்சாட்டின்பேரில் குறித்த பெண் மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட ஆண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தொடர் விசாரணை
தம்முடன் ஐந்து ஆண்டுகளாக பழகிய நிலையில் திருமணத்துக்கு இணங்காமையே, குறித்த பெண் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பழிவாங்கும் விதமாக, ஆண் நண்பரை தனது வீட்டிற்கு வரவழைத்து, தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |