இணையத்தளம் வழியாக ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள்
இணையத்தளத்தை பயன்படுத்தி பல்வேறு விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவது சம்பந்தமாக தற்போது பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக முகநூல் மூலம் போதைப் பொருளுடன் கூடிய இரகசியமான விருந்துகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு நடத்தப்பட்ட பல விருந்துகளில் கலந்து கொண்ட இளைஞர்கள், யுவதிகளை பொலிஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
அதேவேளை சுகாதார வழிக்காட்டல்கள் சம்பந்தமாக பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்காக அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.