தமிழர்களின் உயிரோடு கலந்த மாவீரர் வாரத்தில் கைவைத்து விட்டனரோ? அருட்தந்தை சத்திவேல் கேள்வி

Eastern Province People Northern Province War Father M. Sakthivel
By Independent Writer Nov 15, 2021 04:45 AM GMT
Report

ஆயர்களால் மாவீரர் வாரத்தில் இறந்தவர்களை தனியாக நினைவுகூரும் நிகழ்வை தடுத்து நிறுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் (Father M. Sakthivel) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அதில் மேலும், 

யுத்த காலத்திலும் முள்ளிவாய்க்கால் இன அழிப்புடனான இனப்படுகொலையின் பின்னரும் "மாவீரர் வாரம்" எழுச்சியோடு அனுஷ்டிக்கப்பட்டு தமிழ் தேச விடுதலை தியாகிகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

அது எமக்கிடையில் அரசியல் சிதைவுகளை தடுத்து தமிழர்களை தேசமாக சிந்திக்கவும் விடுதலை அரசியலை முனைப்போடு முன்னெடுக்கவும் வழிகோலியது.

இதனை எமக்கு எதிரான சக்திகளால் ஜீரணிக்க முடியவில்லை என்பதுவே உண்மை. இவ்வருடம் வடக்கு, கிழக்கு ஆயர்கள் வெளியிட்டுள்ள "மதம் கலந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்" எனும் ஊடக அழைப்பு, விடுதலை அரசியல் செயல்பாட்டு தேச சிந்தனைகளை தகர்த்து மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி அறிவிற்கு வித்திட்டு அரசியல் லாபம் தேடும் ஞானசார தேரரின் இன்னும் ஒரு வடிவமாக அமைந்து விடக்கூடாது என்பதுவே எமது எதிர்பார்ப்பு.

"தமிழர்களை அடக்கி அவர்களின் அரசியல் பூண்டோடு தகர்த்து விட்டோம்" என வருடந்தோறும் வெற்றி விழா எடுப்பவர்கள்; முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத, மதவாத சிந்தனையை கொம்பு சீவி அவர்களுக்கு எதிரான வன்முறையை தூண்டிவிட்டனர்.

இதில் ஞானசார தேரரின் பங்கு மிக அதிகமானது. அதில் அரசியல் குளிர்காய்ந்ததோ வேறு சிலர். இவர்களின் அடிவருடிகளுக்கு வடக்கு கிழக்கில் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவித்து உள்ளக வன்முறையை தூண்டிவிடும் நோக்கமும் உள்ளது.

தேச விடுதலை அரசியல் செயற்பாட்டு பயணத்தை சிதைக்க வேண்டும் என்பதே இதன் உள் நோக்கமாகும். இதற்காக முன்னெடுத்த முயற்சிகளில் தோல்வி கண்ட நிலையில் தமிழர்களின் உயிரோடு கலந்த மாவீரர் வாரத்தில் கைவைத்து விட்டனரோ என்று சிந்திக்கத் தோன்றுகின்றது.

அண்மையில் ஞானசார தேரர் மடு பிரதேசத்தில் மக்களின் காணிப் பிரச்சினையை தீர்ப்பதாக கூறி சென்றபோது அவர் வரும் வழியில் மலர் தூவி வரவேற்றனர். இது மதங்களுக்கிடையிலான முரண்பாட்டை மலர் தூவி வரவேற்பதற்கு ஒப்பாகும்.

அதனைத் தொடர்ந்தே ஆயர்கள் மதம் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம் என்று தனித்து முடிவெடுத்து அதனை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர். இது ஞானசார தேரரின் இன்னுமொரு முகமாகவே தோற்றமளிக்கின்றது.

யுத்தத்தின் பின்னர் அன்றாட தேவைகளுக்கும், யுத்த படுகொலைக்கும், உறவுகளை காணாமல் ஆக்கப்பட்டமைக்கும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் என மக்கள் போராடுகின்றனர்.

தொடரும் இன அழிப்பிற்கு எதிராகவும் தினமும் போராட்டம் நடத்துகின்ற சூழ் நிலையில் இப்போராட்டத்தினை சிதைக்கும் ஒரே வழி எமக்கிடையில் பிளவை தோற்றுவிப்பது நோக்கம் கொண்ட சர்வதேச சக்திகள் புலம்பெயர்ந்து வாழும் எம் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியிலான கருத்தியல் ரீதியிலான பிளவுகளை உருவாக்கியுள்ளனர்.

தற்போது வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதற்காக தூபமிடுகின்றனர். இச் செயலுக்கு ஆயர்களின் இறந்தவர்களை நினைவு கூருவோம் எனும் அறிவித்தல் துணையாக அமைந்து விடும் வாய்ப்பு உள்ளது.

வடக்கு, கிழக்கு ஆயர்கள் வெளி சக்திகளின் அரசியல் தேவைகளுக்கு இடமளிக்காது, ஊடக அறிக்கை அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனை, அரசியல் ரீதியான உளவியல் தாக்கம், மாவீரர்களுடைய குடும்பத்தினரின் கவலை என்பவற்றை கருத்திற் கொண்டு மக்களின் குரலுக்கு செவிமடுத்து மக்களோடு பயணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த நிலையில் வடக்கு கிழக்கு சிவில் சமூகமும், சமூக அமைப்புகளும், அரசியல் செயற்பாட்டாளர்களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் அவசரமாக செயற்பட்டு கத்தோலிக்க மக்களை தனியாக அழைப்பு விடுத்திருப்பதையும், ஆயர்களால் மாவீரர் வாரத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வையும் தடுத்து நிறுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதுவே எமது அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு பலமாக அமையும்.எமது எதிரிகளுக்கும் பாடமாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US