தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் புகுந்த கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்
கம்பஹா - கஸ்பே இலுக்கஹேன பகுதியிலுள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் சாந்த ஜயரிசன் சில்வா என்ற 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வாக்குவாதம்
சம்பவத்தன்று நள்ளிரவு உயிரிழந்தவரின் வீட்டிற்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சந்தேக நபர், மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜயரிசன் சில்வாவின் கழுத்தில் பலமாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொலையைச் செய்த பின்னர், சந்தேகநபர் அப்பகுதியில் உள்ள ஒரு விகாரைக்கு சென்று மறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார், சந்தேகநபரை அவர் பயன்படுத்திய கத்தியுடன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் ஒரு மனநோயாளி என்பதும், அதற்காக நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வருபவர் என்பதும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
YOU MAY LIKE THIS VIDEO