திருமணத்திற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொலை செய்த தந்தை

Police spokesman Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime Death
By Steephen Nov 05, 2022 05:13 AM GMT
Report

திருமண வைபவத்தை நடத்துவதற்காக லட்சக்கணக்கான ரூபா பணத்தை கோரி தொடர்ந்தும் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறி, உறங்கிக்கொண்டிருந்த மகனை கோடாரியால் தாக்கி கொலை செய்தார் எனக் கூறப்படும் 65 வயதான நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற பாடசாலை அதிபரான இந்த சந்தேக நபரை நேற்று கைது செய்ததாக குருணாகல் ரிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகனை கொலை செய்ததாக கூறப்படும் புழுவல் பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபர் ரிதிகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 10 ஆம் திகதி திருமணம்

திருமணத்திற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொலை செய்த தந்தை | Father Killed His Son Bothered Him Asking Money

சம்பவத்தில் 29 வயதான ஹேரத் முதியன்சலாகே பராக்கிரம பண்டார ஜயலத் இளைஞனே கொல்லப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் ஜயலத் என்ற இளைஞன் மூத்த மகன் என்பதுடன் அவரது திருமணம் எதிர்வரும் 10 ஆம் திகதி நடக்கவிருந்தது.

அத்துடன் ஜயலத் என்ற இளைஞன் பல வருடங்களாக வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்துள்ளதுடன் அவ்வப்போது இலங்கை வந்து சென்றுள்ளார். திருமணம் செய்துக்கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர் இலங்கை வந்துள்ளார்.

போதைப் பொருளுக்கு அடிமையாகி பணத்தை அழித்த மகன்

திருமணத்திற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொலை செய்த தந்தை | Father Killed His Son Bothered Him Asking Money

போதைப் பொருளுக்கு அடிமையான இந்த இளைஞன், தாம் சம்பாதித்த பணத்தை போதைக்கே அழித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பணம் இல்லாத காரணத்தினால், திருமண வைபவத்தை நடத்த தந்தையிடம் பணத்தை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மகன் தான் விரும்பியது போல் யுவதி ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால், சந்தேக நபரான தந்தையும் தாயும் அதற்கு சம்மதிக்கவில்லை என்பது சந்தேக நபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டில் கட்டில் ஒன்றில் நேற்று அதிகாலை மகன் உறங்கிக்கொண்டிருந்த போது, சந்தேக நபர் கோடாரியால் தாக்கி கொலை செய்து விட்டு, பொலிஸில் சரணடைந்துள்ளார்.

65 வயதான இந்த சந்தேக நபர், குருகுல பாடசாலை ஒன்றில் அதிபராக கடமையாற்றியுள்ளார். இதனை தவிர பிரதேச கூட்டுறச்சங்க தலைவராகவும் பதவி வகித்துள்ளார். சந்தேக நபரின் மனைவி ஓய்வுபெற்ற ஆசிரியை என பொலிஸார் கூறியுள்ளனர்.

திருமணத்திற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொலை செய்த தந்தை | Father Killed His Son Bothered Him Asking Money

போதைப் பொருளுக்கு அடிமையான மகனை அதில் இருந்து மீட்க பல முறை முயற்சித்துள்ளதுடன் புனர்வாழ்வுக்கும் உட்படுத்தியுள்ளனர். எனினும் மகன் தொடர்ந்தும் போதைப் பொருளை பயன்படுத்தி வந்துள்ளதாக சந்தேக நபர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள தந்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன் கொல்லப்பட்ட மகனின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக குருணாகல் விசேட சட்டவைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US