செல்ஃபி எடுக்கச்சென்ற தந்தையும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு
பொலன்னறுவை - புளஸ்திபுர, கும்புக்கனறுவ ஓயாவில் இன்று செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்து தந்தையும் மகளும் இன்று உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
பொலிஸார் வெளியிட்ட தகவல்
இன்று முற்பகல் 10.30 மணியளவில் இவர்கள் ஓடையில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளதுடன், ஆசிரியரான 46 வயதுடைய தந்தையின் சடலம் முதலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 12 வயது மகளின் சடலம் சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி எடுக்கச் சென்ற மகளைக் காப்பாற்ற தந்தையும் ஆற்றில் குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.