திருகோணமலையில் தனியார் மயமாக்கலை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
திருகோணமலை - பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துநகர் விவசாயிகள் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கறுப்பாடை அணிந்து, பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று(01.05.2026) நடந்த போராட்டமானது, திருகோணமலை, கண்டி பிரதான வீதியின் முத்து நகர் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கை
கடந்த பல வருடங்களாக விவசாய காணிகளை சூரையாடி தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின்சார உற்பத்திக்காக வழங்கப்பட்டதை கண்டித்து தொழிலாளர் தினத்தை கரிநாளாக மாற்றி தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, “எமது நிலம் எமக்கு வேண்டும், விவசாயிகளுக்கு நீதி வேண்டும், நலிவடைந்த உழவருக்கு IMF நீதி பெற்றுத்தா, முத்து நகர் விவசாய காணிகளை மீள தா போன்ற" என எழுதப்பட்ட வாசகங்களை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் சுமாராக 50 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.


இலங்கையின் பாரிய நிதி மோசடியில் திடீர் திருப்பம்! திரைமறைவில் மறைந்துள்ள குற்றவாளி யார்... சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி
டாப் 5-ல் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டிய சன் டிவி.. சீரியல்களின் TRP ரேட்டிங் Cineulagam
சுவிட்சர்லாந்தின் மன்னர் என அறிவித்த நபர்..117,000 சதுர மீற்றர் சாம்ராஜ்யம்..அரசியல்வாதிகள் சீற்றம் News Lankasri