யாழில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர் தற்கொலை
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - களபூமியில், விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
உறவினர்கள் இன்று காலை தூக்கத்திலிருந்து எழுந்தவேளை குறித்த குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
காரைநகர் - களபூமியைச் சேர்ந்த சிவஞானம் ரவிச்சந்திரன் (வயது 50) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன் பின்னர் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
எனினும் குறித்த தற்கொலைக்கான காரணம் என்ன என இதுவரை
தெரியவரவில்லை
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan