கொழும்பு நகரில் ஒட்சிசன் வாயுவின் அளவில் வீழ்ச்சி
கொழும்பு நகரில் ஒட்சிசன் வாயுவின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் கொழும்பில் ஒட்சிசன் வாயுவின் அளவு குறைவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் கொழும்பு நகரில் வளி மாசடைதலைத் தடுப்பதற்குச் சுற்றாடல் அமைச்சும் கொழும்பு மாநகரசபையும் இணைந்து கூட்டு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் கொழும்பு மாநகரசபையின் மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின் போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு நகரின் ஒட்சிசன் அளவினை நாள் தோறும் அளவீடு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
கொழும்பு நகரின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்குத் தேவையான நிபுணத்துவ மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு மாநகரசபையின் மேயர் ரோசி, அமைச்சரிடம் கோரியுள்ளார்.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam