ஒட்சிசன் தேவையுடைய நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
ஒட்சிசன் தேவையுடைய கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களுடன் ஒப்பீடு செய்யும் போது ஒட்சிசன் தேவையுடைய கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் ஒட்சிசன் மேலதிகமாக தேவைப்பட்டால் அதற்கும் ஆயத்தமாக இருக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதனை விடவும் உள்நாட்டில் அதிகளவு ஒட்சிசனை உற்பத்தி செய்வதே பொருத்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் 360000 லீற்றர் திரவ ஒட்சிசனை இறக்குமதி செய்ய அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.