போலி விஸ்கி மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு
போலியான முறையில் விஸ்கி ரக மதுபான வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த உற்பத்திச்சாலை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பிரஜை ஒருவர் சட்டவிரோதமான முறையில் இந்த விஸ்கி மதுபான உற்பத்தியை சட்டவிரோதமாக மேற்கொண்டு உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுற்றிவளைப்பு
இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது நீர் கொழும்பு குறணப் பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான நபர் ஒருவரும், பசியாலை பிரதேசத்தைச்சேர்ந்த 55 வயதான நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி சாலையிலிருந்து போத்தல்களை சீல் வைக்கும் இரண்டு இயந்திரங்கள், ஒரு லீட்டர் விஸ்கி வெற்று போத்தல்கள், போலி விஸ்கி நிரப்பப்பட்ட போத்தல்கள், போத்தலுக்கு ஒட்டப்படும் ஸ்டிக்கர் வகைகள், லேபள் வகைகள், மதுபான போத்தல் மூடிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam