ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் அரசாங்கம் விசேட நடவடிக்கை
இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1973 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சமகால தொடர்பாடல் தொழிநுட்ப வளர்ச்சியுடன் பத்திரிகை மற்றும் வானொலிக்கு அப்பால், தொலைக்காட்சி, இணையத்தளம் மற்றும் சமூக ஊடக வலையமைப்புக்கள் மிகவும் துரிதமாக மக்களிடையே பரவலடைந்துள்ளது.
அமைச்சரவை முடிவு
அதனால், மக்களுடைய வாழ்விலும் முக்கிய தாக்கங்களைச் செலுத்துகின்றன என அமைச்சரவை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஒரு செய்தித்தாளில் வெளியிடப்பட்ட தவறான தகவல்களை செய்தித்தாளே சரிசெய்தால் போதாது என்று கூறியுள்ளார்.
மேலும், பத்திரிகை பேரவையால் பிறப்பிக்கப்பட்ட திருத்த உத்தரவு அனைத்து தொடர்புடைய ஊடகங்களுக்கும் பொருந்தும் என்பதை உறுதி செய்வதே இந்தத் திருத்தத்தின் நோக்கம் என்றும், இந்தத் தகவல் மின்னணு மற்றும் இணைய ஊடகங்களுக்கும் பொருந்தும் என கூறியுள்ளார்.
அத்தோடு, பத்திரிகை பேரவை ஒரு செய்தித்தாளில் வெளியிடப்பட்ட தவறான தகவலை சரிசெய்த பிறகு, அதை சம்பந்தப்பட்ட செய்தித்தாளில் மட்டும் சரிசெய்வது போதாது.
ஏனெனில் அந்த செய்தித்தாள் மின்னணு ஊடகங்கள் மற்றும் இணையம் மூலம் வெளியிடப்படுகிறது. அதன்படி, பத்திரிகை கவுன்சில் திருத்தத்திற்கான உத்தரவை பிறப்பித்தால், அந்தச் செய்தியைப் படிக்கும் மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களும் அதையே செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
