வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை தொடர்பில் பரப்பப்படும் போலியான செய்தி!
வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை பொலிஸ் பகுதிகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தியை பொலிஸார் மறுத்துள்ளனர்.
வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை பகுதிகளில் முறையே 140 மற்றும் 106 பேருக்கு கோவிட் தொற்று இருப்பதாகவும் வரும் நாட்களில் குறித்த பொலிஸ் அதிகார பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படும் என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
எவ்வாறாயினும், கோவிட் தொற்றின் இரண்டாவது அலையின் போது வெளியான தகவல்களே மீண்டும் இவ்வாறு வெளியாகியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் 35 கோவிட் -19 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பகுதியில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான கோவிட் வழக்குகள் பதிவாகவில்லை என்றும் அத்தகைய அறிவிப்பில் எந்த உண்மையும் இல்லை என்றும் கிருலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri