வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை தொடர்பில் பரப்பப்படும் போலியான செய்தி!
வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை பொலிஸ் பகுதிகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தியை பொலிஸார் மறுத்துள்ளனர்.
வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை பகுதிகளில் முறையே 140 மற்றும் 106 பேருக்கு கோவிட் தொற்று இருப்பதாகவும் வரும் நாட்களில் குறித்த பொலிஸ் அதிகார பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படும் என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
எவ்வாறாயினும், கோவிட் தொற்றின் இரண்டாவது அலையின் போது வெளியான தகவல்களே மீண்டும் இவ்வாறு வெளியாகியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் 35 கோவிட் -19 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பகுதியில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான கோவிட் வழக்குகள் பதிவாகவில்லை என்றும் அத்தகைய அறிவிப்பில் எந்த உண்மையும் இல்லை என்றும் கிருலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam