தடுப்பூசி செலுத்தாவிட்டால் உயிரிழக்க நேரிடும் - அமெரிக்கா அதிபர் எச்சரிக்கை
அமெரிக்காவில் பனிக்காலத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகவும் உயிரிழக்கவும் நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்நாட்டில் ஒமிக்ரோன் பரவல் அதிகரித்து வருவதுடன் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. மேலும் தினசரி பலி எண்ணிக்கையும் 1300-ஐ கடந்து வருகிறது.
இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிபர் ஜோ பைடன், பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி மூலம் ஒமிக்ரோன் பரவல் மோசமடையாமல் நாடு நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அமெரிக்கர்கள் நோய் தொற்று மற்றும் உயிரிழப்பு குறித்து கவலையடைய தேவையில்லை எனவும் பைடன் கூறியுள்ளார்.
அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டால் தான் நாம் நமது பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் . நாம் நமது தொழில் , மற்றும் கல்வி நிறுவனங்களை தொடர்ந்து நடத்த வேண்டுமானால் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri