நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் வழமைப் போலவே வழங்கப்படும் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷாணி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரையில் எவ்வித சலுகைக் குறைப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னுரிமையின் அடிப்படையில் வீடுகள்
இது குறித்து ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினருக்கான வீடுகளை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை 35 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையளிக்கப்பட்ட சுமார் 25 – 30 வீடுகள் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்காலத்தில் இந்த வீடுகள் முன்னுரிமையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
மொத்தமுள்ள 108 வீடுகளில் ஆளுங்கட்சி எம்.பி.க்களுக்கு 80 வீடுகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு 28 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam