பாடசாலை மாணவர்களிடையே வேகமாக பரவும் கண் நோய்
கொழும்பில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு வலய பணிப்பாளர் பி.ஆர். தேவபந்து அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கடிதம் அனுப்பி இது தொடர்பில் எச்சரித்துள்ளார்.
கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால், உடனடியாக பாடசாலை மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து பரிந்துரைகளை பெற வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண் நோய்
மேலும் பாடசாலையில் கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால் அவர்கள் மற்ற மாணவர்களிடமிருந்து தனித்தனியாக வைக்கப்படுவார்கள் என்றும் வட்டாரக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் 6, 7 மற்றும் 8 தர மாணவர்களின் கண் நோய் காரணமாகவே அதிபர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 22 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri