இலங்கையில் வேகமாக பரவும் நோய் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சளி, இருமல் போன்றவற்றை ஏற்படுத்தும் வைரஸ் கிருமியினால் சிறுவர்கள் மத்தியில் கண்நோய் வேகமாகப் பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வைரஸ் காய்ச்சலால் அவ்வப்போது வைரஸ்கள் மற்றும் கண் நோய்கள் வரலாம் எனவும் எனவே அழுக்கு கைகளால் கண்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நோய் அறிகுறிகள்
கண் சிவத்தல், கண்ணீர் வெளியேற்றம், கண் வலி போன்ற அறிகுறிகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், இந்த கண் நோய் வைரஸ் என்பதால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவையில்லை எனவும், ஐந்து நாட்களுக்கு மேல் இந்நோய் நீடித்தால், சிகிச்சை பெறுமாறும் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம் : தொடர்ந்து ஒலிக்கும் சைரன்கள் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 13 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
