கிளிநொச்சியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர்
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலர்பிரிவின் கீழான பிரதேசங்களில் வெள்ள பாதிப்பிற்குள்ளான நிலமையில் புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவு மற்றும் பாரதிபுரம் மற்றும் கண்ணகிநகர் கிராமத்திலிருந்து 11 குடும்பங்களைச் சேர்ந்த 34 அங்கத்தவர்களை வெள்ள அனத்தங்கரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் அங்கிருந்து பாதிக்கப்பட்ட நிலையில் புன்னைநீராவி G.T.M.S பாடசாலையில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை.
வெள்ள பாதிப்பின் நிலமைகளை அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி), அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர்,கண்டாவளை பிரதேச செயலர்,இராணுவத்தினர் உள்ளிட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உடனடியான உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அனர்த்த நிலமையினை கருத்தில் கொண்டு குளத்தின் நீரேந்தும் பகுதிகளின் கீழ் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும் தமது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam