வெளிநாட்டு பயணங்களுக்காக பெருந்தொகை பணம் செலவு! மறுக்கும் அலி சப்ரி
வெளிநாட்டு பயணங்கள் மூலம் மில்லியன் கணக்கான ரூபாவை தாம் செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக மில்லியன் கணக்கான ரூபாவை செலவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் ஒருவர் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மூலம் இந்த தகவல் தெரிய வந்ததாக ஒரு டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதிவில் அமைச்சர் இந்த பணத்தை 7 வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தவறான தகவல்
Absolutely misleading and false information.
— M U M Ali Sabry (@alisabrypc) June 18, 2023
This is the total cost of 5 national delegations to UNGA, UN HRC(2) , IORA , ASEAN ARF
Two bilateral visits to US and Saudi Arabia.
I led the delegation , apart from me 22 other officials have taken part in these deliberations. https://t.co/dH4ENhZ0pW
எனினும் இந்த தகவல் தவறானது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட ஐந்து உத்தியோகபூர்வ தேசிய தூதுக்குழு பயணங்களுக்கும், அமெரிக்காவிற்கும் சவுதி அரேபியாவிற்குமான இரு தரப்பு பயணங்களின் மொத்த செலவாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயணங்களின்போது தாம் தூதுக்குழுக்களுக்கு தலைமை ஏற்றுச் சென்றதாகவும் தம்மை தவிர மேலும் 22 அதிகாரிகள் இந்த பயணங்களில் இணைந்திருந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |