பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு தொடர்பில் வெளியான தகவல்
பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு மீண்டும் ஒரு சேவை நீடிப்பு வழங்கப்படலாம் என்று நம்பகமான தகவல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதற்கேற்றாற் போல பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று (27.06.2023) காலை 10 மணிக்கு பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ள பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு கடந்த 25 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
எவ்வாறாயினும், அவர் நேற்று (26.06.2023) மாலை 6 மணியளவில் வந்து பொலிஸ் தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் தனது வழமையான பணிகளை மேற்கொண்டிருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சேவை நீடிப்பு
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலத்தை நீடிப்பது அல்லது புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதன் காரணமாக தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கான சேவை நீடிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரனவுக்கு வழங்கப்பட்ட 6 மாத சேவை நீடிப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
அதன் பின்னர் விமானப்படை தளபதியாக விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ச நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam
