ஹிட்லர் ஆட்சியே தேவை! - ஜனாதிபதிக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவி நீடிப்பு? (பத்திரிக்கை கண்ணோட்டம்)
மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நிலையில், ஹிட்லர் போன்றவர்களின் ஆட்சியே சரியானது எனவும், ஆகையினால் நாட்டை ஆட்சி செய்ய ஹிட்லர் தான் தேவைப்படுகின்றார் என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கோவிட் தொற்று காரணமாக ஜனாதிபதியின் பதவி காலத்தில் இல்லாமல் போன் இரண்டு ஆண்டு காலத்தை நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி பெற்றுக்கொடுக்கும் யோசனையை கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் யோசனையும் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்த விரிவான தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்.