பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்குவது குறித்து ஆலோசனை
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு சேவை நீடிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் வரும் 26ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
அதன்படி, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தனது ஓய்வூதியக் கோப்பைத் தயார்படுத்தி வைத்துள்ளார்.
சேவை நீடிப்பு
இதன்போது பொலிஸ் ஓய்வூதியம் மற்றும் நலன்புரி துறைக்கு ஓய்வூதியக் கோப்பை இதுவரை வழங்கவில்லை என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, புதிய பொலிஸ்மா அதிபர் பதவிக்கு எந்தவொரு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பெயரையும் ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கவில்லை எனவும் அரசியலமைப்பு பேரவையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.