தமிழர்களுடைய பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலே: வினோநோகராதலிங்கம்

Vavuniya Sri Lanka Government
By Shan Mar 29, 2023 01:55 PM GMT
Report

தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலே என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அதனோடு இணைந்த பிரதான சூலாயுதம் அதனோடு ஏனைய விக்கிரகங்கள் பிடுங்கப்பட்டு எறியப்பட்ட விடயத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழர்களுடைய பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலே: வினோநோகராதலிங்கம் | Expropriation Of Tamil People Land By Government

நீண்ட காலமாக சைவ மக்களினால் அப்பிரதேச மலைப்பகுதி புனித பிரதேசமாக வழிபடப்பட்டு வந்த ஆலயம் திட்டமிட்ட வகையிலே அரசாங்கத்தின் முகவர் அமைப்புக்களினால் புனித தலம் இடித்தழிக்கப்பட்ட மிகவும் மோசமான செயலை கண்டுபிடிக்க வேண்டும்.

எதிர்காலத்திலே இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுமாக இருந்தால் அல்லது அரசாங்கத்தின் முகவர் அமைப்புகளினால் செயற்படுகின்ற குறிப்பாக தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா ஏனைய மகாவலி எல் வலயம் இப்படியாக அரசாங்கத்தின் முகவர் அமைப்புகள் தமிழர் பகுதிகளில் குறிப்பாக வட கிழக்கு தாயக பிரதேசங்களில் திட்டமிட்டு நில அபகரிப்பை இது போன்ற அமைப்புக்களின் ஊடாக மேற்கொள்வதனை கண்டிக்கின்றோம்.

கண்டனக் குரல்களை அரசாங்கம் செவிமடுப்பதில்லை

தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டே வருகின்றன. அரசாங்கத்திற்கு எதிராக கண்டன குரல்களை நாங்கள் மட்டுமல்ல சர்வதேசமும் இவ் விடயத்தில் தலையிட்டாலும் அரசாங்கம் இதனை பற்றி செவி சாய்ப்பதாகவே இல்லை. இவ் விடயங்களை தொடர்ச்சியாக பார்த்து கொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக தொல்பொருள் திணைக்களம் ஏறக்குறைய 330 பிரதேசங்கள் தொல்பொருள் திணைக்களத்திற்குரிய இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் வடமாகாணத்தில் மட்டும் 167 இடங்கள் தொல்பொருள் திணைக்களத்திற்குரிய இடமாக பிரகடனப்படுத்தி அபகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் தான் ஏனைய திணைக்களங்களும் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாகவே இருக்கின்றது.

அரசாங்கத்தின் அனுசரணையோடு பௌத்தமயமாக்கல்

இதில் அரசாங்கம் சம்மந்தப்படவில்லை என கூற முடியாது. அரசாங்கத்தின் ஆசிர்வாதத்தோடு அனுசரணையோடு தான் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

வெடுக்குநாறி மலையில் உள்ள சைவ அடையாளங்கள் திட்டமிட்ட வகையிலே இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது. மிலேச்சத்தனமான மிகவும் கொடுங்கோல் ஆட்சியினுடைய வெளிப்பாடாக தான் இருக்கிறது.

இதனை இனங்கண்டு சம்பந்தப்பட்டவர்கள் யார், தொல்பொருள் திணைக்களமாக இருக்கலாம் அவர்களை பாதுகாக்கின்ற பாதுகாப்பு படையாக இருக்கலாம் முழுமையான விசாரணை நடைபெற்று இதன் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நாளை 30 ஆம் திகதி கண்டன பேரணிக்கு வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஆதரவு வழங்க இருக்கின்றோம். வவுனியா மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிலான், Italy, இத்தாலி, Italy

13 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Thirunelvely, சொலோதென், Switzerland

14 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Swindon, United Kingdom

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, திருநெல்வேலி, Markham, Canada

13 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, கிளிநொச்சி, திருவையாறு

06 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, Markham, Canada

13 May, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada, Michigan, United States, Altena, Germany

10 May, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Anaipanthy

03 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US