தாவர உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நிலையம் யாழில் திறந்து வைப்பு
வெளிநாடுகளுக்கு தாவர விதைகள் மற்றும் தாவரங்கள் ஏற்றுமதி செய்தல், அங்கு இருந்து இறக்குமதி செய்யப்படும் விதைகள் மற்றும் தாவரங்களை பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் பிரிவு யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் தாவர விதைகளுக்கான சான்றிதழ்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது
இதற்கமைய இன்றிலிருந்து தாவரங்களை பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் பிரிவு யாழ்ப்பாண தபால் நிலையத்துடன் சேர்ந்து இயங்க உள்ளது.
இன்றைய திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர்
பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் எல்.இளங்கோவன்
உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.