புதுக்குடியிருப்பு காட்டுப்பகுதியில் வெடிப்பொருட்கள் மீட்பு (Photo)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் காட்டுப்பகுதிக்குள் வெடிக்காத நிலையிலான வெடிபொருட்கள் சில இன்று மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி அரசபுலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமையச் சிறப்பு அதிரடிப்படையினர் வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
இதன்போது போரின் போது பயன்படுத்தப்பட்ட விடுதலைப்புலிகளின் தயாரிப்பான தமிழன் கைக்குண்டு ஒன்றும், 120 மில்லி மீற்றர் எறிகணை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
இவை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற சட்ட செயன்முறைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில்
புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.