கிளிநொச்சி வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் இருந்து வெடிபொருட்கள் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து பொலிஸாரால், பழைய 30 ஏகே ரவைகள் மற்றும் 3 ஏகே 47 துவக்குறிய மகஸின்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து இரத்தினபுரம் செல்லும் வீதியில்
உள்ள நீர் தங்கிக்கு முன்புள்ள தனியார் வீட்டில் ஆள் நடமாட்டங்கள்
இல்லாமையினால் அவ் வீட்டில் இனம் தெரியாத நபர்களினால் இவ் வெடிபொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாக குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.