முல்லைத்தீவில் வெடிமருந்து மற்றும் கசிப்புடன் ஒருவர் கைது
முல்லைத்தீவு நகர் பகுதியில் சட்டவிரோத வெடி மருந்து மற்றும் கசிப்பினை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு நகர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் இன்று (24) மாலை வேளை ஈடுபட்ட முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நின்ற நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போது அவரிடம் இருந்து சட்ட விரோத வெடி மருந்து மற்றும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.
சுதந்திரபுரம், உடையார் கட்டு புதுக்குடியிருப்பினை சேர்ந்த 42 அகவையுடைய நபரிடம் இருந்து 200 கிராம் வெடி மருந்து மற்றும் 1500 மில்லிலீற்றர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இவரை நாளை (25) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 14 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
