ஆப்கானிஸ்தான் காபூலில் உள்ள சீக்கியர் கோயிலில் குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய குருத்வாராவிற்கு அருகில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காபூலில் சீக்கியர் கோவில் வெடிகுண்டு வெடித்ததையடுத்து பெருமளவிலான பக்தர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை அதிகாலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது, மேலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல்கள் வெளிவரவில்லை.
கோயிலுக்குள் 30 பேர் வரை இருந்துள்ளனர்
சம்பவ இடத்தில் இருந்த உள்ளூர் அதிகாரி ஒருவரான கோர்னம் சிங், சர்வதேச ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவிக்கையில், குண்டுவெடிப்பு நடந்த போது கோயிலுக்குள் 30 பேர் வரை இருந்துள்ளனர்.
அவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் அல்லது எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது,” என்று தெரிவித்துள்ளார்.
"தலிபான்கள் எங்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை, என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை," என்று சிங் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுடெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், " காபூலில் உள்ள புனித குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து வெளியாகும் செய்திகள் அறிந்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். நாங்கள் காபூலின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மேலும், வெளிவரும் முன்னேற்றங்கள் குறித்து கூடுதல் விவரங்களுக்காக காத்திருக்கிறோம் " என்று தெரிவித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியை பாதுகாப்பு படையினர் முழுவதும் சுற்றி வளைத்துள்ளனர். இருப்பினும், இந்த சம்பவம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த கட்டிடம் தலைநகரில் உள்ள கடைசி சீக்கிய கோவிலாகும், மேலும் 1970களில் 100,000 ஆக இருந்த 100,000 சீக்கியர்கள் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் ஆப்கானிஸ்தானில் 140 சீக்கியர்கள் மட்டுமே இருப்பதாக சமீபத்தில் சமூகத் தலைவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.