உக்ரைன் நீர்மின் நிலைய அணையில் குண்டுவெடிப்பு! பேரழிவுக்கான எச்சரிக்கை: செய்திகளின் தொகுப்பு
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் சோவியத் கால அணையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பினால், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நீர்மின் நிலைய அணை தகர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான காாணொளியினை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
இந்த அணை 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவினால் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்திற்கும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள Zaporizhzhia அணுமின் நிலையத்திற்கும் தண்ணீர் வழங்குகின்றது.
இதில் தற்போது குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளமையினால் அணை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,