சுவிட்சர்லாந்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டி(Video)
23 வது தடவையாக சுவிட்சர்லாந்து லுட்சேர்ண் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கடந்த வருடம் கோவிட் தொற்று காரணமாக இப் போட்டிகள் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இப் போட்டியானது லுட்சேர்ண் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை உணவுகள்
இப் போட்டிகளில் 150க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பல மாநிலங்களில் இருந்தும் பங்குப்பற்றியிருந்தனர்.
இப் போட்டிகளில் இலங்கை முறைப்படி தயாரிக்கப்பட்ட உணவுகளும் விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,